அரசியல்தமிழகம்

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றும் வரை ஓய மாட்டேன் : டிராபிக் ராமசாமி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சமாதிகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டிராபிக் ராமசாமி கூறினார். இதுகுறித்து டிராபிக் ராமசாமி நம்மிடம் கூறுகையில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. மெரினா கடற்கரை பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர். எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததும் அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரித்து தீர்ப்பும் வழங்கப்பட்டது. நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை திரும்ப பெறக்கோரி திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது வழக்கறிஞரையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை திரும்பப் பெற வில்லை. இவ்வாறு இருந்தபோதும் நான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும் தற்போது மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் சமாதிகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். மெரினாவில் இருக்கும் சமாதிகளை அகற்றும்வரை ஓயமாட்டேன் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button