தமிழகம்

போதையில் அட்டகாசம் செய்த வடமாநில தொழிலாளி…பல்லடத்தில் பரபரப்பு…!

பல்லடத்தில் வட மாநில போதை ஆசாமி அட்டகாசம்! சிக்னல் மீதேறி தற்கொலை விடுத்ததால் பரபரப்பு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காகேஸ்வர் பெகரா தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காகேஸ்வர் பெகராவை தாக்கி செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை நான்கு பேர் வழிப்பறி செய்ததாக பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காகேஸ்வர் பெகாரா குடிபோதையில் வேலைக்கு வந்ததால் கடந்த ஓராண்டிற்கு முன்னரே வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.. இதனை அடுத்து நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஊதாரித்தனமாக சுற்றி திறிவது வழக்கமாக கொண்டுள்ளான்.

இதனிடையே குடிபோதையில் தன்னை தாக்கயதாக நாடகமாடி பொய் புகார் கொடுத்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காகேஸ்வர் அங்கிருந்து தப்பி காலை பல்லடம் நால்ரோடு சந்திப்பில் உள்ள சிக்னல் கம்பத்தில் ஏறி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளான்.

போக்குவரத்து மிகுந்த நால்ரோட்டில் திடீரென சிக்னல் கம்பத்தில் ஏறி நிற்பதை காண மக்கள் அதிக அளவில் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசார் காகேஸ்வரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கம்பத்தில் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் காகேஸ்வர் பெகரா சற்று மன நலம் பாதித்தவரென்பது தெரிய வந்தது. பல்லடம் பிரதான சாலை சிக்னல் கம்பத்தில் வட மாநில இளைஞர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button