தமிழகம்

திருப்பூரில் கொள்ளை போகும் கனிம வளங்கள்..கண்டுகொள்ளாத அதிகாரிகள்….

திருப்பூர் அருகே கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கோவை மாவட்ட எல்லையான காமநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ளது கந்தம்பாளையம். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு பகலாக சட்டவிரோதமாக இட்டாச்சி இயந்திரத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான மதிப்பிலான மண் வெட்டி எடுத்து கடத்தப்பட்டு வருகிறது. தேர்தலை பயன்படுத்தி கோவை மாவட்ட எல்லை பகுதியில் இருந்து இது போன்று மண் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகளில் பல்வேறு கிராமங்கள் வழியாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட எல்லையான காமநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து எந்த வித அனுமதியும் பெறாமல் ஓடக்கல் வெட்டப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் பொள்ளாச்சிக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இது போன்று கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த இரு மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நிருபர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button