தமிழகம்

தகரக் கொட்டகையில் இயங்கிய பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் நடவடிக்கை

பரமக்குடி அருகே தகரக் கொட்டகையில் இயங்கிய தொடக்கப்பள்ளிக்கு உடனே புதிய கட்டிடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் நயினார் கோவில் ஒன்றியம் பி.வலசை எனும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தகரக் கொட்டகையிலும் தார்ப்பாய் மறைவிலும் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியை  ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தற்காலிகமாக அங்கன் வாடி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யவும் உடனடியாக தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த செய்தி நமது நாற்காலி செய்தியில் செய்தியாக வெளியானது. இதனைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் வந்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button