தமிழகம்

இறப்பதற்கு முன் தனக்குத் தானே இரங்கல் கடிதம் எழுதிய சென்னை தொழிலதிபர்

சென்னையைச் சேர்ந்தவர் 72 வயதான எஜ்ஜி கே.உமாமகேஷ். அவர், கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். ஆனால், அவர் அதற்கு முன்னுதாகவே, அவர் கைப்படவே தனக்குத் தானே இரங்கல் கடிதம் எழுதி உறவினர்களிடம் கொடுத்துள்ளார். உமாமகேஷின் மறைவைத் தொடர்ந்து, அவர் எழுதிய இரங்கல் கடிதத்தை அவருடைய உறவினர்கள், நாளிதழ் ஒன்றில் இரங்கல் பகுதியில் வெளியிட்டனர். அந்த இரங்கல் குறிப்பு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

உமாமகேஷ் எழுதிய அந்த இரங்கல் குறிப்பில், ‘அன்பான நண்பர்களே, பகைவர்களே.. இரண்டுக்கும் மத்தியில் உள்ளவர்களே, என்னுடைய அற்புதமான வாழ்நாளில் பங்கெடுத்துக் கொண்டமைக்கு நன்றி. எனது பார்ட்டி முடிந்துவிட்டது. இதில், யாரையும் ஹேங் ஓவர் நிலையில் நான் விட்டுச் செல்லவில்லை என நம்புகிறேன்.

எல்லோருக்குமான நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. சந்தோசமாக வாழ்ந்து உங்களது பார்ட்டியைக் கொண்டாடுங்கள். உங்கள் பார்ட்டியைத் தொடருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, உமா மகேஷ் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button