தமிழகம்

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி

கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் கொரோனா பரவல் இருந்தாலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பது பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதம் ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமோ அல்லது அதற்கு பிறகு திறக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுதேர்தலுக்கு பிறகு ஜூன், ஜூலை மாதத்தில் தேர்வினை நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் பொதுத்தேர்வினை நடத்துவதற்குரிய பணிகளை அரசு தேர்வுத்துறை 6 மாதங்களுக்கு முன்னதாக துவங்கும். அவ்வாறு துவங்கினால் மட்டுமே 10, 11, 12ஆகிய 3 வகுப்புகளுக்கும் சிக்கல் இல்லாமல் பொதுத் தேர்வினை நடத்த முடியும். ஆனால் தற்போது வரை அரசிடமிருந்து பொதுத்தேர்வுகள் சம்பந்தமான ஆரம்பகட்ட ஆலோசனைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பொதுத்தேர்வினை சிக்கல் இல்லாமல் நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்வுத்துறை குழப்பத்தில் உள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த விவகாரத்தில் முறையான முடிவெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர். சீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர் மனோஜ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில், NTA இணையப் பக்கத்திலிருந்து அந்த முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் என்பவர் பீளமேடு நேசனல் மாடல் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்தார். இவர் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு எழுதினார். அக்டோபர் 11ம் தேதி ஒ.எம்.ஆர் சீட்டில் வெளியான முடிவுகளைப் பார்த்துள்ளார். அதில் 594 மதிப்பெண்கள் என காட்டியது. பின்னர் கடந்த 15ம் தேதி மீண்டும் ஒருமுறை மாணவர் மனோஜ் ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்தபோதும் 594 மதிப்பெண் காட்டியுள்ளது.

இந்நிலையில், வெளியான முடிவுகளில் 248 மதிப்பெண் மட்டும் காட்டியதால் மாணவர் மனோஜ் அதிர்ச்சியடைந்து, ஓ.எம்.ஆர் சீட்டை ஆய்வு செய்தபோது பழைய ஓ.எம்.ஆர் சீட்டின் முடிவுகளுக்கும் வந்த முடிவுகளுக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரளிக்க NTA டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை எனவும், இதுவரை 5 முறை மெயில் மூலம் புகார் தெரிவித்திருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார்.

மேலும், தற்போது உள்ள ஓ.எம்.ஆர் வேறு முடிவுகளைக் காட்டுவதாகவும், பழைய ஓ.எம்.ஆர். வேறு முடிவுகளை காட்டுவதாகவும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாகவும் மாணவர் மனோஜ் கூறியுள்ளார்.

உதுமான்அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button