தமிழகம்

கோயில் நிலத்தை காவல்துறைக்கு தருவதா? : கிராம மக்கள் போராட்டம்!

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது பழமையான இந்த கோயிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆண்டுதோறும் இந்த கோயிலில் சித்திரை மாத திருவிழா ஒரு வாரம் நடைபெறும். 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 10,000 மேற்பட்ட மக்கள் கொண்டாடும் பிரம்மாண்ட விழாவாக இத்திருவிழா நடைபெறும்.

இந்த கோயிலின் அருகே உள்ள காலி இடத்தில் திருவிழாக்களின்போது சிறுவர்களின் விளையாடும் சாதனங்கள், தற்காலிக கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பொதுமக்கள் திருவிழாவைக் கொண்டாடும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காலி இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் காவல் துறைக்கு மாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. அறநிலையத் துறையின் இந்த முயற்சியை கண்டித்து, மங்கலம் சாலை பெரிய ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம்“, “தமிழக அரசே கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றாதே” என்கிற பாதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

  • வெற்றிவேல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button