தமிழகம்

தமிழக அரசுக்கு வந்த கொரோனா நிதி விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம்

முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள், பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை 8 வாரங்களில் அரசு இணைய தளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இதுதொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார். அதில் அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், கொரோனாவுக்கு நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையை பேணவும், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் அதை வெளியிட உத்தரவிட கோரியிருந்தார். அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா நிதியாக யார், யார் எவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார்கள், எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது, அந்த நிதி எப்படி நிர்வகிக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை 8 வார காலத்திற்குள் வெளியிட உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button