சினிமா

விஷாலால் பறிபோன உயிர் : அவர் மட்டும் நினைத்திருந்தால் எனது மகனை காப்பாற்றியிருக்கலாம் கதறும் தந்தை!

விஷால் உதவி செய்திருந்தால் என் மகனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என விஷால் கார் ஓட்டுநரின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாலமார்தாண்டபுரத்தை சேர்ந்தவர், கண்ணதாசன். இவரது மகன் பாண்டியராஜன், கடந்த 5 வருடங்களாக நடிகர் விஷாலிடம் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். சில மாதங்களுக்‍கு முன்பு உடல்நலம் பாதிக்‍கப்பட்டு சொந்த ஊர் வந்த பாண்டியராஜன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


நடிகர் விஷாலின் உதவியாளரிடம் தொடர்பு கொண்டபோது, பண உதவி செய்வதாக உறுதியளித்தார். பாண்டியராஜனின் தந்தை, நடிகர் விஷாலை சந்திக்‍க சென்றபோது, அவரை சந்திக்‍க முடியவில்லை.
மேலும் அலுவலக ஊழியர்கள் பாண்டியராஜனின் ஊதிய பாக்‍கியை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர். உயர் சிகிச்சை அளிக்‍க போதிய பணம் இல்லாத காரணத்தால், பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்..
இதுகுறித்து இறந்துபோன பாண்டியராஜனின் தந்தை கூறுகையில், “என் மகன் நடிகர் விஷாலின் கார் ஓட்டுநராக இருக்கிறார். நடிகர் விஷால் நினைத்திருந்தால் என் மகனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். அவரிடமிருந்து சரியான நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் எனது மகன் இன்று உயிருடன் இருந்திருப்பார்” என கண்ணீர் மல்க கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button