இந்தியா

தேசிய மருத்துவர்கள் தினம் 2020

உலகில் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு காரணங்கள் முன்வைத்து வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்நாளில் கொண்டாட காரணம் மருத்துவ பணிக்கு தம்மை அர்ப்பணித்துகொண்ட பி.சி. ராய் எனப்படும் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்கள். இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மாமேதை இவர். ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டப்படிப்பு படித்தவர்.பீகார் மாநிலத்தில் பாட்னா அருகில் இருக்கும் பாங்கிபோரில் 1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். இவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளான ஜூலை&1 தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இவர் மகாத்மா காந்திக்கு நெருக்கமானவராக காந்தியுடன் இணைந்து விடுதலைக்கு போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். ஏழைகளுக்கு என்று தன்னுடைய வீட்டை மருத்துவமனையாக கட்டிகொள்ள அனுமதி அளித்த டாக்டர் பி.சி.ராய் முதல் அமைச்சராக இருந்தபோதும் இலவசமாக மருத்துவம் செய்து வந்தார் என்பதும் தெரிந்துகொள்ள வேண்டும். இவரது மருத்துவ குணத்தை பெருமைப்படுத்தும் வகையில் மருத்துவ சேவை செய்துவருபவர்களுக்கு 1976 ஆம் ஆண்டு முதல் டாக்டர்.பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் தினமான ஜூலை&1 நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. மருத்துவர்களின் சேவைகளை இரவு பகல் பாராமல் குறையில்லாமல் பெற்றுவரும் இந்நந்நாளில் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றியை மட்டும் செலுத்தினால் போதுமா? குறிப்பாக இந்த வருடத்தின் துவக்கம் முதல் கொரோனா என்னும் பெருந்தோற்று பாதிப்பு மக்களை மீளமுடியாத துயரத்தில் உண்டாக்கியுள்ளது. மக்களை தாண்டி அதற்காக இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தங்கள் உயிரை ஈந்துள்ளார்கள் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஏற்கனவே கொரோனாவின் தீவிரம் சற்றும் குறையாமல் ஆக்ரோஷமாக பெருக்கெடுத்துவரும் சூழலில் மருத்துவர்கள் தங்கள் வீடுகளுக்கு கூட செல்லமுடியாமல் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் சூழல் உண்டாகியிருக்கிறது. இரவு, பகல் பாராமல் தூக்கமில்லாமல் உரிய நேரத்தில் பசியாற முடியாமல் இன்னும் சொல்ல போனால் இயற்கை உபாதை கழிப்பதற்கு நேரம் ஒதுக்க கூட நேரமில்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மருத்துவர்களின் சேவையை பெரிதென போற்றி வாழ்த்து சொல்லும் இந்நாளில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கொரோனா தொற்று உருவாகாமல் நம்மை பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகளை மருத்துவர்கள் கற்று தந்திருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறார்கள். இதை சற்றும் அலட்சியம் செய்யாமல் உரிய பாதுகாப்போடு நம்மை தற்காத்து கொள்வதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை.

இந்த நேரத்தில் கொரோனா பீதியில் இருக்கும் இந்த சூழலில் மக்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதும் அவசியத்துக்கு வெளியில் சென்றாலும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிப்பதும் நிச்சயம் மருத்துவர்களுக்கு சேவை செய்வது போன்றுதான். அதோடு உடலில் தென்படும் அறிகுறிகளை கண்டு அச்சம்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் அவர்களது பணிச்சுமையை எளிதாக்க முடியும். இந்த சூழலில் இந்த நந்நாளில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது அவர்களது பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை அரசும் மக்களும் தருவது மட்டுமே இந்த ஆண்டு தேசிய மருத்துவர் தினத்தின் முக்கிய குறிக்கோளாக கடைபிடிக்கலாம்.

இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதை காட்டிலும் அவர்களது சேவையை போற்றி அவர்களும் பாதுகாப்பாக வாழ நாம் அவர்களது அறிவுரைக்கேற்ப செயல்பட வேண்டும்.

& விஜயகுமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button