தமிழகம்

நாயால் வந்த பிரச்சினை, இரு குழுக்கள் மோதல்!

விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலுக்கன் குளம்பகுதியில் அனைத்து சமுதாயம் சார்ந்த1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்ஒரு பிரிவினரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்த போது மற்றொரு தரப்பினர்வளர்த்து வந்த நாய் ஒன்றுகுறுக்கே விழுந்தது. இருசக்கர வாகனம் மீது மோதியநாய் படுகாயம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த நாய் வளர்த்தவர்கள்இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் சண்டையிட்டனர்.

இந்த சம்பவம் பிரிவினரிடையே வாய்சண்டையாகி பின்பு கைகலப்பாக மாறிஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கைகலப்பில் ஜெயக்குமார்,உதயகுமார், உமா மகேஸ்வரி ஆகிய3 பேரும் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்கு காரணமான வீரணன், ரஞ்சித்குமார்,கருப்பசாமி ஆகிய 3 பேரை வன்னியம்பட்டிகாவல்துறையினர் கைது செய்தனர்.இச்சம்பவம்குறித்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பெருமாள், ,டி.எஸ்.பி மாரிச்சாமி ஆகியோர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்இரு தரப்பினரிடையே வன்னியம்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button