தமிழகம்

முயலை வேட்டையாடியவர்கள் டிக் டாக்கால் மாட்டிய பரிதாபம்!

தென்காசிமாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளாளன்குளம்,பாண்டியாபுரம் கிராமங்களைச் சேர்ந்த உலகமுத்து, சுப்புராஜு,ஆரியங்கசாமி, சுரேஷ், ஆகிய நான்குபேரும் வேட்டை நாய்களை வைத்துகாட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடியதை வீடியோஎடுத்து டிக்டாக் வீடியோவில்பதிவு செய்துள்ளனர். அந்த டிக்டாக்வீடியோவை புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் பார்வையிட்டதை தொடர்ந்து இந்த முயல் வேட்டையானதுஎந்த பகுதியில் நடந்தது என்று விசாரனைசெய்து வந்த நிலையில் அதில்ஒருவர் நாய்களை இருசக்கர வாகனத்தில்ஏற்றிய நிகழ்வையும் பதிவிட்டுள்ளார்.

அந்த இருசக்கர வாகன எண்ணின் விலாசத்தைபோக்குவரத்து அலுவலக இணைதளத்தில் சென்றுபார்வையிட்டதில் அந்த இருசக்கர வாகனஎண் புளியங்குடி அருகே உள்ள வெள்ளாங்குளம்பகுதியை சேர்ந்த உலகமுத்து என்பவரதுபெயரில் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அந்த ஊருக்கு சென்றபுளியங்குடி வனத்துறையினர் அவரை கைது செய்துஅழைத்து வந்தனர்.

பின்னர்உலகமுத்துவை விசாரனை செய்ததில் அவருடன்நாய்களை வைத்து முயல் வேட்டைக்குசென்றவர்களை கூறியதன் அடிப்படையில் மற்ற மூன்று பேரும்அருகில் உள்ள பாண்டியாபுரம் கிராமத்தைசேர்ந்தவர்கள் என தெரியவந்தை அடுத்துஅவர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள்வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கரவாகனங்களும் பறிமுதல் செய்தனர்.

வேட்டைநாய்களை வைத்து முயல் வேட்டையில்ஈடுபட்டதற்காக வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ஒருவருக்கு ரூ25000 வீதம் நான்குபேருக்கும் ஒரு லட்சம் ரூபாய்அபாரதம் விதித்து புளியங்குடி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button