தமிழகம்

மதுரை அருகே பெண்ணின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

மதுரை அருகே சகோதரனை மது குடிக்க அழைத்துச் செல்வதை தட்டிக்கேட்ட பெண்ணின் வீட்டின் மீது வீசப்பட்ட நாட்டுவெடிகுண்டை கவ்விச்சென்ற நாய், குண்டு வெடித்து தலை சிதறி உயிரிழந்தது.

பாலமேடு ராமக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த செல்வராணி  தனது தம்பியை மது அருந்த அழைத்துச் சென்றதாக கூறி  சின்னத்துரை என்பவரை வசை பாடியுள்ளார். வாக்குவாதம் முற்றியதில்  ஆத்திரமடைந்த சின்னத்துரை தான் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்து செல்வராணியின் வீட்டின் மீது வீசியுள்ளார்.

வீசிய 4 குண்டுகளில் ஒன்று வெடித்த நிலையில் வெடிக்காமல் கிடந்த  ஒன்றை செல்வராணி வளர்த்து வரும் நாய் கவ்விக் கொண்டு ஓடியுள்ளது.அப்போது குண்டு திடீரென வெடித்ததில் நாய் தலை சிதறி உயிரிழந்தது. இதுதொடர்பாக சின்னத்துரையை கைது செய்த போலீசார்  தப்பி ஓடிய செல்வராணியின் தம்பியை தேடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button