அரசியல்

ஊரடங்கு நிலையில் இது தேவைதானா…? சர்ச்சையில் சிக்கிய நடிகை & எம்.எல்.ஏ ரோஜா

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆந்திர மாநில எம்.எல்.ஏ நடிகை ரோஜா, தனது தொகுதிக்குச் செல்லும் போது, அங்கு அவருக்கு மக்கள் வரிசையாக நின்று பூக்கள் தூவி வரவேற்பு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா, தனது தொகுதியான நகரிக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார்.

தொகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டரை அவர் திறந்து வைக்கச் சென்றார். அப்போது, கிராம மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாலையின் இருபக்கமும் நின்று, அவர் வரும் பாதையில் பூக்களைத் தூவினர். ரோஜாவும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நடந்து வந்தார்.

பின்னர், அவருக்கு பிரமாண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டது. ஊரடங்கின் போது சமூக இடைவெளி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ரோஜா கலந்துகொண்ட நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button