தமிழகம்
திருவள்ளூர் மாவட்ட காவல்துறையை பாராட்டியுள்ள முதலமைச்சர்
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2020/04/1587390855107499.jpg)
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளோடு பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டு வரும் காவல்துறையினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அங்கு தங்களதுஅன்றாடப் பணிகளுக்கிடையே சாலையோர வாசிகளுக்கு உணவளிப்பது, ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும்ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்று வழங்குவது என போலீசார் பல்வேறுசேவைகளை செய்து வருகின்றனர்.
![](http://naarkaaliseithi.com/wp-content/uploads/2020/04/ss12.jpg)
இந்த நிலையில் “மக்களை தேடிச் சென்று உதவி செய்து வரும்திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கும் மற்றும் அனைத்து காவலர்களுக்கும், இதனை தலைமையேற்றுசிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களுக்கும்மனமார்ந்த நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுதல்கள் என தமது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.