தமிழகம்

ஹைட்ரோ கார்பன் : மன்னார்குடி ஆர்டிஓ சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறாரா?

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கிணறுகள் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடைபெற இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர், பெரியகுடி ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி துவங்கி விட்டதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததார்.

ஏற்கனவே காவிரி டெல்டாவில் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக தோண்டப்படும் கிணறுகளை தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என்று 2019 ஜூலை 19 அன்று கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு காத்திருப்பில் ஈடுபட்டோம்.

இதனையடுத்து மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் முன்னிலையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் 2016 முதல் காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதால் எந்தவொரு இடத்திலும் அனுமதி வழங்கவில்லை எனவும், பெரியகுடி, சோழங்கநல்லூர் ஆகிய இரு கிணறுகளும் சட்டவிரோதமாக தோண்டப்படுவதாக நாகப்பட்டிணம் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

இதனையடுத்து கிணறு அமைக்கும் பணியை உடனே கைவிட்டு வெளியேற வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உடன்பாடு ஏற்பட்டதால் பெரியகுடி கிணறு தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ஓஎன்ஜிசி வெளியேறியது. சோழங்கநல்லூரில் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி வெளியேறுவதாக ஓஎன்ஜிசி தெரிவித்தது. 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

இதனை பின்பற்றி சோழங்கநல்லூர் கிராமத்தில் கிணறு தோண்டப்பட்டு ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிக்கும் ஒஎன்ஜிசியின் சட்டவிரோத செயல்பாட்டை தடுத்து நிறுத்தி வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்தார்.

இதனையடுத்து அதே கோரிக்கையை வரியுறுத்தி பிப்ரவரி 25ஆம் தேதி மன்னார்குடி ஆர்டிஓவிடமும் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை அழைத்து வந்து ஓஎன்ஜிசி அதிகாரிகள் முன்னிலையில் மன்னார்குடி ஆர்டிஓ தனது அலுவலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் பணிக்கு ஆதரவாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இதனால் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தடை விதித்துள்ள நிலையில் ஓன்ஜிசிக்கு ஆதரவாக மன்னார்குடி ஆர்டிஓ செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் ஓஎன்ஜிசி அதிகரிகளும், கிராமத்தினர் 4 பேரும் உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டடனர். இதனையடுத்து கூட்டம் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

  • வெற்றிவேல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button