அரசியல்

சிக்கலில் சீமான்?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டு காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதன்பின்னர் முதல்வரும் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக பேசினார். அதிமுகவை தொடர்ந்து எதிர்த்து வந்த சீமான் திடீரென முதல்வரை அவரது வீட்டில் சந்தித்தது அரசியல் அரங்கில் கவனத்தை ஏற்படுத்தியது. சிமானின் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாடு மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.

இதனால் இனிவரும் காலங்களில் சீமான் அதிமுகவை விமர்சிப்பது குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக -நாம் தமிழர் இடையே சுமுகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீமான் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய பேச்சு தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஏழு தமிழர்களின் விடுதலை குறித்த கேள்விக்கு, “எஜமானர்கள் என்ன சொல்வார்களோ அதைத்தானே தமிழக அரசு கேட்கும். எஜமானர் தூங்கும்போது கையைக் காலை அமுக்கிவிடுவதுதான் இவர்கள் தரும் அழுத்தம்” என்று பேசியிருந்தார்.

தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினைரிடைய அமைதியைக் குலைப்பது 153, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் 505 (1)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகிவிட்டு ஏமாற்றியதாக அவர் சமீபத்தில் பரபரப்பு புகாரை அளித்தார். இதை ஏற்காத சீமான் ‘’ நடிகை விஜயலட்சுமி சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் வறுமையில் தவித்து வருவதாக என்னிடம் கூறினார். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தனது பாணியில் கருத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து அவர் சீமானுடன் எடுத்திருந்த பழைய புகைப்படங்களை வெளியிட்டு ‘நாங்கள் காதலித்ததற்கு இதுதான் ஆதாரம் என்று கூறினார். மேலும் அந்த புகைப்படங்கள் காதலர் தினத்தை நாங்கள் இருவரும் கொண்டாடினபோது எடுக்கப்பட்டவை என தெரிவித்தார். சர்ச்சைகளை கண்டுக்காமல் சென்று கொண்டிருக்கும் சீமான் மீது விஜயலட்சுமி சமீபத்தில்கூட அவர் சிவன் கோயிலில் சென்று வழிபட்டதை கலாய்த்து பேசினார்.

இப்படி பல வழிகளில் சீமானை சாடி வரும் விஜயலட்சுமி சீமானுடன் இருந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த வீடியோவில் சட்டையின்றி காணப்படும் சீமான் “ஏய் பொண்டாட்டி நா கெட்டவன் இல்லடி, கேடுகெட்டவன்” என பஞ்ச் வசனத்தை பேசுகிறார். ஆனால் அதில் கேட்கும் பெண் குரல் விஜயலட்சுமியா என்பது உறுதியாக தெரியவில்லை.

  • வெற்றிவேல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button