அரசியல்
மாநிலங்களவை உறுப்பினராகிறாரா அ.ரகுமான்கான் !
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2020/02/maxresdefault.jpg)
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ரகுமான்கான் வழக்குரைஞர், எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். சிறுசேமிப்பு குழு துணைத் தலைவராகவும் கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இப்போது திமுக உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினர். வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ளாராம். இவரை டெல்லிக்கு அனுப்பிவைக்க ஸ்டாலின் விரும்புகிறாராம். இவரது வாதத்திறமை, சட்டஅறிவு மாநிலங்களவையில் வெளிப்பட வேண்டும் என்பது திமுக தொண்டர்களின் விருப்பம்.