தமிழகம்

மகள்களிடம் பாலியல் சீண்டல்… சைக்கோ தந்தை போக்சோவில் கைது !

ராமநாதபுரம் அருகே வேலியே பயிரை மேய்ந்தது போல், பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் 5 மற்றும் 7 வயது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கோ தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

ஏர்வாடியை அடுத்த கன்னிராஜபுரத்தை சேர்ந்தவன் மாரிமுத்து. 10 ஆண்டுகளுக்கு முன் காதல் கலப்பு திருமணம் செய்த இவனுக்கு 5 மற்றும் 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுமிகளிடமும், பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் மாரிமுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம், இரு சிறுமிகளும் கூறிஅழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் முறையிட்டதன் பேரில், அவர்கள் கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாரிமுத்துவை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button