தமிழகம்

லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை..!

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறன. நவம்பர் மாதம் சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரி விடுதியில் எம்பிஏ மாணவர் வம்சி பவன் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொங்கல் விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊருக்குச் சென்ற நிலையில் சிலர் விடுதியிலேயே தங்கியுள்ளனர். வம்சி பவன் தங்கியிருந்த அறை நீண்டநேரமாக திறக்கப்படாததால் மாணவர்கள் தட்டியுள்ளனர். பின்னர் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்த போது நைலான் கயிறுகொண்டு மின் விசிறியில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராஜிவ் காந்தி மருத்துவமனையிலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் சீதாம்மதுரா பகுதியைச் சேர்ந்த வம்சி பவனின் தந்தை ஆந்திர மாநிலத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவருகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button