தமிழகம்

வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ

பகலில் பதுங்கிக்கொண்டு இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை கொடுக்கக்கூடிய பல சைக்கோக்களின் செய்திகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த கோவை சைக்கோவின் நோக்கமானது போலீசாருக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

கோவை மாவட்டம் கவுண்டம் பாளையத்தில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டு சுற்றுப்புறத்தில் அளிக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளார். அதில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வருவதும், அப்பகுதி குடியிருப்புகளில் ஏறி குதித்து ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பதான காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அந்த வீட்டு உரிமையாளர் தனது பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் அவர்களில் சிலரது வீடுகளில் வைக்கபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டபோதும் அந்த நபர் வந்து சென்றது தெரிந்தது.

உடனே அந்த தெரு மக்கள் ஒன்று கூடி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசாரிடம் சைக்கோ வந்து சென்ற சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலிசார், சிசிடிவியில் இருந்த மர்ம நபரின் டூ வீலர் எண்ணின் அடிப்படையில் அவரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் வரும் அந்த நபரால் பொருட்கள் ஏதும் திருப்படவில்லை எனவும் போலீசாரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் அந்த மர்ம நபர் வீட்டு ஜன்னல்களை மட்டும் திறந்து பார்த்து விட்டு செல்லும் நடவடிக்கையால் குழப்பத்துடன் சேர்ந்த பயம் உண்டாகியுள்ளதாக அப்பகுதி பெண்கள் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button