தமிழகம்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் மர்ம ஆசாமி

சென்னையில் தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வரும் 50 வயது மதிக்க தக்க மர்ம ஆசாமி ஒருவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து வரும் சின்னஞ்சிறு மாணவிகள் தான் இந்த 50 வயது காமபிசாசின் இலக்கு என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்..!

15 தினங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து சைக்கிளில் சென்று நோட்டமிடும் இந்த மிருகம். தனியாக வரும் மாணவிகளை அடையாளம் கண்டு கொள்வதாக கூறப்படுகின்றது.

தாய் தந்தை மற்றும் தோழிகள் துணையின்றி பள்ளிக்கு தனியாக செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து செல்லும் இவன். ஆட்கள் இல்லா இடம் பார்த்து அந்த மாணவிகளை நெருங்கி பாலியல் ரீதியாக அநாகரீக செய்கையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து ஓடி விடுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதுவரை இந்த காமுகனின் சேட்டைக்கு 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான மாணவிகள் புகார் கொடுக்கவில்லை என்றும் ஒரு சிலர் தனியாக பள்ளிக்கு செல்வதை தவிர்த்து பெற்றோருடன் பள்ளிக்கு செல்வதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பள்ளிக்கு தனியாக செல்வதை நோட்டமிட்ட, அந்த 50 வயது அயோக்கியன் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான். சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு நேரத்துடன் சென்றதால் பள்ளி வாயிலுக்குள் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் மாணவியை பின் தொடர்ந்து சென்ற காமுகன் மாணவியின் உதட்டை கடித்து வைத்து விட்டு தப்பிச் சென்றான். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விசாரித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியை அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை பார்த்து மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னஞ்சிறு மாணவியிடம் அத்துமீறிய அந்த சைக்கோ ஆசாமியை பிடிக்க உதவி ஆய்வாளர் சோபியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்த தனிப்படை காவல்துறையினர் அந்த சில்மிஷ ஆசாமியை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மாணவிகளின் பெற்றோரை அச்சுருத்தியதாக காவல் ஆய்வாளர் கமலா தேவி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை ஒப்படைத்த பள்ளி தலைமை ஆசிரியரையும், காவல் ஆய்வாளர் கமலா தேவி மிரட்டியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் கமலாதேவியை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த காமுகனிடம் தனியாக நடந்து செல்லும் சிறுமிகளும் பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் புகைபடங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இவனை பற்றி விவரங்கள் தெரிந்தால், பொதுமக்கள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளிடம் தைரியத்தை வரவைப்பதற்காக தனியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது வரவேற்க தகுந்தது என்றாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் செல்லும் போது இந்த காமுகனை போன்ற கயவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட வசதியாக போய்விடுகிறது என்பதால், சிறுமிகளை தனியாக வெளியே அனுப்புவதை தவிர்த்து துணைக்கு யாராவது ஒருவர் செல்வது சாலச்சிறந்தது என்கின்றனர் காவல்துறையினர்.

  • ராபர்ட்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button