தமிழகம்

புரட்சித் தலைவர் வழியில் 150 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தீபாவளி விருந்து !

மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் 35 வருடங்களாக வெங்கடேஸ்வரா ஸ்னாக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.சந்திரசேகர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றிஐம்பது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுப்பதை வாடிக்கையாகவும், தனது வழக்கமாக வைத்திருப்பதாக நமக்கு வந்த தகவலையடுத்து நாமும் நேரில் சென்று சந்திரசேகரை நேரில் சென்று தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது சந்திரசேகர் கூறுகையில்,

ஒரு நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டுமானால் தொழிலாளர்கள் சந்தோஷமாக வேலை செய்ய வேண்டும். அவர்களின் தேவைகள் அனைத்தையும் நாம் பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களும் நேரம் காலம் பார்க்காமல் முதலாளிக்கு வருமானம் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்வார்கள். தீபாவளி மட்டுமல்ல தமிழர்களின் பண்டிகைகள் அனைத்து நாட்களிலும் அனைத்து வகையான உணவு வகைகளையும் தயார் செய்து தொழிலாளர்களோடும், அவர்களது குடும்பத்தினர்களோடும் அமர்ந்து உணவு சாப்பிட்டு அவர்களை திருப்பதி படுத்துவதில் எனக்கு ஒரு சந்தோஷம். இதை பல வருடங்களாக செய்து வருகிறோம். என்னுடைய நிறுவனத்தின் முதுகெலும்பாக திகழும் என் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் மதியஉணவு அன்னதானமாக வழங்குகிறேன். தீபாவளிக்கு புத்தாடை, இனிப்பு, உணவு வகைகள் அனைத்தும் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவதில் எனக்கு ஆத்மார்த்த திருப்தி ஏற்படுகிறது. இந்த எண்ணம் எனக்கு ஏற்படுவதற்கு காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான் காரணம் என்று கூறி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறி சந்தோஷத்துடன் வழி அனுப்பி வைத்தார் சந்திரசேகர்.

தமிழகத்தில் நடைபெறும் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் அனைவரும் தங்களது தொழிலாளர்களை சந்திரசேகரைப் போல் கௌரவப்படுத்தினால் தொழிலாளர்கள் ஏன் போராடப்போகிறார்கள். மாறுவார்களா பெருமுதலாளிகள் என்ற ஏக்கத்தோடு நாமும் கிளம்பினோம்.

பாஸ்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button