அரசியல்இந்தியா

சிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம் !

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் தேடிக் கொண்டதாக புகார் கூறப்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் பீட்டர், இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற, ப.சிதம்பரம் தொடர்ந்து ஜாமீன் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணையில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இதன் பிறகு தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களில் ப.சிதம்பரம் வெளியேற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் திகார் சிறைக்கு சென்று, ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தாங்கள் பதிவு செய்த வழக்கில், அவரைக் கைது செய்தனர். இதற்கிடையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது.

விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் உடன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் அமலாக்கத்துறை சார்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவர் அமலாக்கத்துறை காவலில் இருக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button