தமிழகம்

குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து மூதாட்டி மீது மோதிய காவலர்?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படும் காவலர், வேகத்தடையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மயில்சாமி என்ற அந்த காவலர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். திங்கட்கிழமை மாலை மூச்சுமுட்ட குடித்துவிட்டு முழு போதையில் இருசக்கர வாகனத்தை மயில்சாமி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டி ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் சொல்லப்படுகிறது. அவரை பின் தொடர்ந்து சில இளைஞர்கள் துரத்திக்கொண்டு வர, சிறிது தூரத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட மக்கள் வசைமாரி பொழிந்தனர்.

காவலர் மயில்சாமியை பெருமாநல்லூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்த பொதுமக்கள், புகார் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

  • முத்துப்பாண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button