தமிழகம்

மக்களை அச்சுறுத்திய நிர்வாண திருடன் கைது !

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வி.என்.ஆர் நகரைச் சேர்ந்தவர் தாமஸ்(40). இவர் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அதிகாலை வேளையில் வீட்டின் ஜன்னலை திறந்து, செல்போனை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.

இந்த சூழலில் அவர்கள் வீட்டில் இருந்த குழந்தை அழுததால், தாமஸ் குடும்பத்தினர் எழுந்து மின்விளக்கை போட்டனர். அப்போது மர்ம நபர் திருட முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே திருடன், திருடன் என்று கூச்சலிட்டனர். இதைக் கேட்டதும் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அருகில் உள்ள ரம்ஜான் என்பவரின் வீட்டு சுவற்றில் ஏறி உள்ளே குதித்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் அப்துல் மஜித் என்பவரின் வீட்டில் நிர்வாண கோலத்தில் மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறாததால், பின்னர் தாமஸ் வீட்டின் ஜன்னல் வழியாக திருட முயற்சித்தது கண்டறியப்பட்டது.

அவர் கையில் கம்பு ஒன்றை வைத்துக் கொண்டு சுற்றி திரிவது தெரிகிறது. நிர்வாண கோலத்தில் திருட முயற்சித்து வரும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வி.என்.ஆர் நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் செந்தில் குமார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button