தமிழகம்

தமிழகத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வழுத்தூர் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் செம்பாட்டூர் அருகே கீழ முட்டுக்காடு பகுதியில் வயலில் ஒரு சிலபேர் நிலக்கடலை பதித்துக் கொண்டிருந்தனர். ஒரு சில பேர் வயலில் நடவு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வைத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது இதனையடுத்து திடீரென்று அந்த பகுதியில் இடி தாக்கியது இடி விழுந்ததில் வயலில் பணியாற்றிக்கொண்டிருந்த 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.. காயமடைந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்துவிட்டார்கள். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button