தமிழகம்

மக்கள் மனதில் நீங்காத இடத்தில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன்

காவல்துறையில் உயரிய விருதான குடியரசுத் தலைவர் விருது புதுகோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
காவல் துறை அதிகாரிகள் என்றாலே கரடுமுரடான தோற்றம், அதிகாரத்துடன் கூடிய விசாரணை பேசுபவர்கள போன்ற பிம்பங்கள் இருப்பது உண்மைதான் இருப்பினும், காவல் அதிகாரிகள் அனைவரும் அப்படி அல்ல என தனக்குரிய பாணியில் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை நகர மக்களின் நீங்காத இடத்தில் புதுக்கோட்டை நகர காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் வாசுதேவன் அலுவலக முறையிலும் சரி, வாழ்க்கை முறையிலும்சரி, மெல்லிய கோடுக்கிடையே தான் ஏதாவது வித்தியாசம் காணப்படுகிறது..

அலுவலக நடைமுறைகள் துணிவு, மேலதிகாரிகள் இடத்தில் பணிவு, பொதுமக்களிடம் கனிவு, ஒரு தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் இருப்பதால் தான் புதுக்கோட்டை நகர காவல்நிலைய ஆய்வாளர் பரவாசுதேவன் காவல் துறையில் உயரிய விருதான குடியசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டதன் செய்தி எதிரொலியாக அவருக்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், என அனைவராலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..

இதுமட்டுமல்லாமல் ஆய்வாளர் பரவாசுதேவனுக்கு பணி உயர்வுக்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
புதுக்கோட்டை நகர பொதுமக்களுடன் சேர்ந்து நாமு‌ம் பரவாசுதேவனை பாராட்டிமகிழ்வது சால சிறந்தது.

  • சரவணக்குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button