தமிழகம்

வீடு புகுந்து தாக்கியதாக உதவி ஆய்வாளர் மீது புகார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கணவன் – மனைவி பிரச்சனையில் தலையிட்ட உதவி ஆய்வாளர் ஒருவர், கட்டிட பொறியாளரை வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். கட்டிடப் பொறியாளரான இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி செண்பகலட்சுமியை பிரிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

பழனிக்குமாருக்கு எதிராக செண்பகலட்சுமியின் குடும்பத்தினர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகார் தொடர்பான விசாரணையை அடுத்து மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக பழனிக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், செண்பகலட்சுமியின் உறவினர் எனக் கூறப்படும் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா என்பவர், பழனிக்குமாரை வீடு புகுந்து தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. அதிகாலை 2 மணி அளவில் வீடு புகுந்து இசக்கி ராஜா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பழனிக்குமார் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button