தமிழகம்

ஜாதிக் கலவரத்தை தூண்டுவதே ரஞ்சித்தின் நோக்கம் : ஹெச்.ராஜா

ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் தான் பேசியதை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும், ராஜராஜனின் பேரன்கள் பல சாதியில் இருப்பதால் பிரச்சனையாக்கி விட்டதாக அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் கிண்டலடித்துள்ளார்.
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்ததும் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற்றவர் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித்..!

2 நாட்களாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு சென்னை திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய போது ராஜராஜன் குறித்து தான் பேசியதை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார் என்றார்.
தனது பேச்சால், இந்து தேசியம், தமிழ் தேசியம் பேசுபவர்களும், பல சாதியில் உள்ள ராஜராஜனின் பேரன்களும், மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாக கூறி சிரித்தார் அட்டகத்தி ரஞ்சித்.

ராஜராஜன் குறித்த தன்னுடைய கருத்தில் இருந்து எப்போதும் பின் வாங்க போவதில்லை என்றும் தான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும் ரஞ்சித் தெரிவித்தார்.
ஏற்கனவே ராஜராஜ சோழன் குறித்த கருத்துக்கு ரஞ்சித்தை, நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் அதே பாணியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நோக்கமே இந்து சமுதாயத்தில் ஜாதிக் கலவரத்தை தூண்டுவது தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை ஹெச்.ராஜா தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா.ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார். சரித்திர ஆதாரங்களோடு ராஜராஜ சோழன் காலத்தில் தனி உடமை, நிலவுடைமை என்பது கிடையாது. ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாச்சேரி என்கின்ற ஒன்று இருந்தது. தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது. சமண மதத்தில் தண்டனை என்பது கிடையாது. அதனால் கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், உயிரை கொன்று உண்பவர்கள் போன்றவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது. எனவே ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை என்பது இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுடைய சதி தான். இயக்குனர் ரஞ்சித் இந்து கிடையாது. நான் ஆதாரங்களோடு சில விஷயங்களை சமர்ப்பித்தால் சிலருக்கு கோபம் வருகிறது. பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களுடைய நோக்கமே இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டி, அதில் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு, அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான். எனவே ரஞ்சித்தின் செயலானது, மதமாற்றத்தின் ஒரு பகுதியாகும்” என்று குற்றம்சாட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button