தமிழகம்

இயற்கையை பாதுகாக்கும் காவலர்

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை காவல்நிலைய போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் சுபாஷ் சீனிவாசன். இவர் வெயில் காலங்களில் பணிபுரியும் பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்க சொந்த செலவில் தண்ணீர் கேன் வைத்து பராமரித்து வருகிறார். அதேபோல் சாலை ஓரங்களில் மரங்களில் ஆணி வைத்து அடிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளை அகற்றுவதோடு ஆணியையும் அகற்றி இயற்கையை பாதுகாத்து வருகிறார். நகராட்சி ஊழியர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு காவலர் ஓய்வு நேரங்களில் இதுபோன்ற சமூகப் பணிகளை செய்துவருவதை அப்பகுதி வாழ் மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். காவல்பணியோடு இதுபோன்ற சமூகப் பணிகளை காவல்துறையினர் செய்வது வரவேற்கத்தக்கது. இவரை போன்றே மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவலர்களும் அந்தந்த பகுதிகளில் இதுபோல் இயற்கையை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button