அரசியல்

பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி : சீமான்!

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி போல் செயல்படுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமதேவன்பட்டியில் உள்ள முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளரே மீண்டும் போட்டியிடுவார். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி போல் செயல்படுகிறார்.
இந்தியாவை ஆண்ட வெள்ளைக்கார ஆட்சியில் கூட தேசிய மொழிகளுக்கு அங்கீகாரம் கொடுத்தனர். ஆனால் மோடி ஆட்சியில் இந்திக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தருகிறார். இறந்துப் போன சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். செத்துப் போய்க் கொண்டிருக்கும் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
திமுகவில் வாரிசு அரசியல் இல்லையென்றால் தான் வியப்பு. திமுக கட்சிக்குள் யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக தான் வாரிசுகளுக்கு கட்சிப் பதவி கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button