தமிழகம்

திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து ரூ.11 லட்சம் கையாடல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து அபராதத் தொகை 11 லட்சம் ரூபாயை கையாடல் செய்த போக்குவரத்து காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் என்பவர் தலைமைக் காவலாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் விளாத்திகுளம் அருகே காடல்குடி உள்ள காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், ரஞ்சித் குமார் பணிபுரிந்த ஜனவரி முதல் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளிடம் 11 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.
இந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் போலி ரசீதுகள் தயாரித்து மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button