சினிமாதமிழகம்

நாடக நடிகர்கள் பிச்சைக்காரர்களா? : பாக்யராஜ் மீது கருணாஸ் ஆவேசம்!

நாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம் என்று நடிகர் கருணாஸ் ஆதங்கமாக பேசியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் நாடக நடிகர்களை அவமதிப்பது போல் சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர், பாக்யராஜ் பேசியுள்ளதாக கூறி நாடக நடிகர் ஒருவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருது அதில் அவர்”பாக்யராஜ் சமீபத்தில் நாடக நடிகர்களிடையே சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியபோது, ஓட்டு கேட்க வரும்போது ஏழ்மையில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு ஓரளவு பண உதவி செய்வோம் என்றும் அதன் பின்னர் வெற்றி பெற்று பதவியேற்றவுடன் நாடக நடிகர்களுக்கு பல உதவிகள் செய்வோம் என்று பேசியுள்ளார்.

நாடக நடிகர்கள் ஓட்டுக்கு காசு வாங்கும் பிச்சைக்காரர் என பாக்யராஜ் கருதி இவ்வாறு பேசியுள்ளார். அவர்தான் எங்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருகிறார். நாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம். அவருக்கு நாடக நடிகர்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது. அவ்வாறு ஓட்டு போட்டால் அது நாடகத்துறைக்கே செய்யும் துரோகம்‘ என்று பேசியுள்ளார். இந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. பாக்கியராஜ் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்காததால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதனையொட்டி விஷால் அணியில் இருக்கும் கருணாஸ் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். பாக்கியராஜ் மதிப்பிற்குரிய இயக்குநர் மற்றும் மிகப்பெரும் நடிகராக இருந்து கொண்டு இவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் இதற்காக கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button