தமிழகம்

நீட் தற்கொலை விவகாரம்..! – பா.ரஞ்சித்தை விமர்சிக்கும் நடிகை காயத்ரி ரகுராம்..!

இந்த வருடம் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
அந்த வகையில் திரைப்பட இயக்குனர் பா. இரஞ்சித்தும் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.


அந்த பதிவில், நீட் தேர்வுப் படுகொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போது ரிதுஸ்ரீ, வைசியா. எளியவர்களுக்குக் கல்வி மறுப்பு. நீட் என்ற கொள்கையைச் சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதைத் தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்.
என அவர் வருத்தத்துடன் இந்த பதிவை செய்திருந்தார்.
இந்நிலையில் பாஜக ஆதரவாளரான நடிகை காயத்ரி ரகுராம், ப.ரஞ்சித் கருத்திற்கு எதிரான விமர்சனத்தை முன்வைப்பது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், ஒரு படம் ஓடாவிட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லதுஅடுத்த படத்தை நன்றாக பண்ண வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லது படங்களையே தடை செய்ய வேண்டும் என்று போராடுவீர்களா? என கிண்டல் செய்யும் தொனியில் பதிவிட்டுள்ளார்.
காயத்திரி ரகுராமனின் இந்த பதிவு, பா.ரஞ்சித்தை மட்டுமல்லாது நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அணைத்து மாணவ மாணவியரின் கருத்தையும் நக்கலடிக்கப்படுவது போல் உள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button