தமிழகம்

மானாமதுரையில் போலி பத்திரப்பதிவு : சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

போலி அடையாள அட்டை, வாரிசு சான்றிதழ் தயாரித்து போலி பத்திரம் பதிந்தது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது மானாமதுரை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மானாமதுரையைச் சேர்ந்த சிவராமய்யர் (எ) பிச்சுவையர் மனைவி லெட்சுமி. இவரது வாரிசான சிவராமனுக்கு சொந்தமான மானாமதுரை தாலுகா தெற்குச்சந்தனூர் குரூப்பில் பள்ளமீட்டான் கிராமத்தில் பட்டா எண் 534ல் 4 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் இடையர் குடியிருப்பை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
மேற்படி சொத்தை மானாமதுரை வெங்கடேஸ்வரா நகரில் வசிக்கும் வெங்கடேஸ்வரன், பிருந்தாவன தெரு வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து மோசடியாக போலி அடையாள அட்டை, வாரிசு சான்றிதழ் தயாரித்து கடந்த 2015 அக்டோபரில் கொட்டகுடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு கிரையப் பத்திரம் பதிவு செய்ததாகவும், அப்போதைய சார்பதிவாளர், பத்திர எழுத்தர் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இடையர் குடியிருப்பைச் சேர்ந்த கண்ணன் கடந்த 8ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார்.
மானாமதுரை போலீசார் மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button