தமிழகம்

மதுரையில் தூங்கிக்கொண்டிருந்த ரௌடியின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்

மதுரை முத்துபட்டி அய்யனார் புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சௌந்தரபாண்டி மர்ம நபர்களால் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்துபட்டி அய்யனார் புரம் 4வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரௌடி சௌந்தர பாண்டி. 43 வயதான இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
சௌந்தர பாண்டி மதியம் அவரது மாமா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரைத் தூக்கிச்சென்று சரமாரியாக வெட்டி தலையைத் துண்டித்துக் கொன்றுள்ளனர். சௌந்தரபாண்டியின் தலையை எடுத்துச் சென்று மதுரை வசந்த நகர் ரயில்வே தண்டவாளம் அருகே வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
தடுக்க வந்த சௌந்தர பாண்டியின் உறவினரையும் மர்ம கும்பல் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.
இது பற்றி அறிந்து விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் சௌந்தரபாண்டியின் உடலையும் தலையையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button