தமிழகம்

35 கிலோ கஞ்சா கடத்திய மூன்று நபர்கள் கைது!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தனக்கன்குளம் பிடிஆர் காலனி பகுதியில் காசிராஜன் என்பவரது வீட்டில் 35 கிலோ கஞ்சா பதுக்கி இருந்ததாக மதுரை மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து ஸ்டீபன் ராஜ் உதவி ஆய்வாளர் தலைமையில் முருகன் அருள் சின்ன அதியன் ரமேஷ் சுரேந்திரன் வயக்காட்டு சாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது காசிராஜன் என்பவரது வீட்டில் 35 கிலோ கஞ்சா பதுக்கி இருந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை செய்தபோது உசிலம் பட்டி அருகே கீரிபட்டியை சேர்ந்த மூக்கையா, முத்தையன் இருவரும் சேர்ந்து கஞ்சாவை கடத்தி வந்து காசிராஜன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. விசாரணையின் அடிப்படையில் மூன்று நபர்களையும் கைது செய்து ஆஸ்டின் பட்டிக்கு உட்பட்ட பகுதி என்பதால் ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தில் மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button