தமிழகம்

வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்

பெரம்பலூரில் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் அசோக் நகரில் வசித்து வரும் தினேஷ் என்பவர், பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக கடைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் வராண்டாவில் தினேஷின் நிறைமாத கர்ப்பிணியான மனைவி சத்தியபாமா என்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
வீட்டின் கேட் மூடப்பட்டு அருகிலேயே சாவி வைக்கப்பட்டுள்ளது. அந்த சாவியை எடுத்த இரு டவுசர் கொள்ளையர்கள் சத்தியபாமாவிற்கு தெரியாமல் நைசாக வீட்டிற்குள் சென்று, பூட்டாமல் இருந்த மர பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, அரை சவரன் கொண்ட தலா இரு மோதிரங்களை திருடியுள்ளனர்.
பிறகு சத்தியபாமாவை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த எட்டே கால் சவரன் தாலி சங்கிலியையும் அவர்கள் பறித்து சென்றுள்ளனர். இதேபோல் நொச்சியம் கிராமத்தில் நைனாம்பாள் என்ற மூதாட்டியிடம் 6 சவரன் தங்க சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button