தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்? : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டவர்களை துன்புறுத்துவது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு நடந்த போராட்டத்தை வைத்து தற்போது வரை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் நீதிபதி/துணை ஆட்சியர் இறுதி முடிவெடுக்கக் கூடாது. இந்த பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button