அரசியல்தமிழகம்

கலெக்டர் குறித்து சர்ச்சை பேச்சு : வக்கீல் மீது போலீஸ் வழக்கு

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சாமி(37). வக்கீல். இவர் மதுரை முன்னாள் கலெக்டர் நடராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும், முன்னாள் மதுரை கலெக்டர் நடராஜனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். மேலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறிய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.
இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி, இவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்ஐ மணிக்குமார் தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், சாமி மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர். சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ‘‘கஞ்சா விற்போருக்கும், போலீசுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனை கூறினால் என்னை மிரட்டுகின்றனர்’’ எனக்கூறி நிர்வாணமாக கோர்ட் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதியில் ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button