அரசியல்

ஸ்ரீதன்யாவின் விருப்பத்தை உடனே நிறைவேற்றிய கமல்

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவின் விருப்பத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நிறைவேற்றியுள்ளார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா வெற்றி பெற்றார். 410-வது இடம் பிடித்திருந்த அவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் கேரள பழங்குடியின பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். பின், வயநாடு தொகுதிக்கு பிரசாரத்திற்கு வந்த ராகுலை ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் ஸ்ரீதன்யா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திக்க விரும்புவதாகவும் எப்படி சந்திப்பேன் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீதன்யாவை கமல்ஹாசன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம், ஸ்ரீதன்யாவின் விருப்பத்தை கமல் நிறைவேற்றியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button