தமிழகம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்

மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் உயிரியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றும் ரவீன், சாம் டேனியல் ஆகியோர், தொடர்ந்து மாணவிகளிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சுற்றுலா செல்லும் போது அவர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கல்லூரி முதல்வர் அது குறித்த புகாரை துறைத் தலைவர் மற்றும் பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் ஐ.சி.சி. குழுவிற்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாணவர்கள் கடந்த சில நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைவில் விசாரணையை முடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போராட்டத்தைக் கைவிடுமாறும் ஐ.சி.சி. குழு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button