தமிழகம்

ஆஸ்த்திரியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை…

7வது சர்வதேச கோஜு ரியூ கராத்தே போட்டிகள் ஐரோப்பா கண்டம் ஆஸ்த்திரிய நாட்டில் உள்ள பர்ஸ்டெண்டெல்டில் 2024 செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி துவங்கி 8 ஆம் தேதி முடிவடைந்தது. சர்வதேச அளவில் 26 நாடுகளை சேர்ந்த 1200 வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் 20 பேர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த போட்டிகளில் தமிழ்நாடு கோஜு ரியூ அமைப்பின் தலைவர் சென்சாய் பார்த்தீபன் மற்றும் செயலாளர் பிரமோஷ் ஆகியோர் தலைமையில் கோவையை சேர்ந்த 6 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் சர்வதேச தரப்பட்டியலில் குமித்தே பிரிவில் 5 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவையை சேர்ந்த கைலாஷ் 16 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் டீம் கட்டாவில் வெண்கல பதக்கம், சீனியர் குமித்தே 85 கிலோவிற்கு மேல் பிரிவில் தர்ணீஷ் வெண்கல பதக்கமும், 21 வயதிற்குட்பட்டோருக்கான குமித்தே பிரிவில் வெண்கல பதக்கம், பெண்கள் பிரிவில் டீம்கத்தா பிரிவில் மகாகவுரி வெண்கல பதக்கம், சீனியர் குமித்தே பிரிவில் 84 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், ஆகாஷ் 21 வயதிற்குட்பட்டோருக்கான குமித்தே பிரிவில் தரவரிசை பட்டியலில் 5 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்து கோவை திரும்பும் வீரர்களுக்கு 11.09.2024 புதன் கிழமை அன்று கோவை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக நிகழ்சி ஒன்றில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் சர்வதேச அளவில் சாதனைகள் படைத்து நாடு திரும்பிய இந்திய அணியின் தமிழக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்தில் திரண்டு வந்திருந்த பெற்றோர்கள், கராத்தே ஆசிரியர்கள் பொதுமக்கள் வெற்றி பெற்றவர்களுக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button