தமிழகம்

விடுமுறை நாளில் பத்திரப்பதிவு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடுமுறை நாளில், சார்பதிவாளர் மகேஷ் ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களுக்கு பத்திரப்பதிவு மேற்கொண்ட செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில், 168/38 பதிவு எண் கொண்ட இடத்தை கள ஆய்வு மேற்கொள்ளாமல், பணத்தை பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது. அதேபோல் கிள்ளுக்கோட்டையைச் சேர்ந்த அடைக்கலசாமி என்பவரின் இடத்திற்கு கார் எடுத்து வரச்சொல்லி கள ஆய்விற்குச் சென்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவர் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தால், இவரால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரியவரும் என்கிறார்கள். மேலும் பதிவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button