தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.500 சேர்த்து ரூ. 2,500 ஆக வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ள இந்த சட்டவிதிகளின்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் நிதியுதவித் தொகையில் 25 சதவீதத்தை சட்டப்பூர்வமாக அதிகரித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். ஏற்கெனவே, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திலும் இதுபோன்ற சலுகையை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கவில்லை. எனவே ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ. 500 சேர்த்து ரூ.2,500 ஆக வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button