தமிழகம்

என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க சி.எம்: பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமல்ஹாசன் கேள்வி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குற்றவாளிகளுக்கு தரப்படும் தண்டனை, அனைத்து பெண்களுக்கும் தமிழக அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கேள்விகளையும், கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
மேலும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் “அந்த பெண் அலறிய குரலை நினைத்துப் பார்க்கும்போது மனம் பதறுகிறது, பயம், தவிப்பு கலந்த அந்த பெண்ணின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.வழக்கை விசாரிக்கும் எஸ்.பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிவிட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அவமானதை எப்படி துடைக்கப்போறீங்க சாமி? இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் ” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இதனையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button