தமிழகம்

சட்டவிரோதமாக “தாய்பால்” விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மாதவரம் கே.கே.ஆர் கார்டன் முதலாவது தெருவில்  லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்கிற மருந்து விற்பனை கடை உள்ளது. செம்பியன் முத்து என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இங்கு தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு சுமார் 200 மிலி கொண்ட இந்த தாய்ப்பால் பாட்டில் விலை சுமார் 700 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தாய்ப்பால் யார் யாரிடமிருந்து பெறப்பட்டது, எங்கிருந்து யார் மூலமாக வந்தது என்பது போன்ற விசாரணையில்
மருத்துவத்துறை அதிகாரிகளும் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் தாய்பால் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. சட்டவிரோதமாக  மாதவரம் பகுதியில் தாய்ப்பால் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button