தமிழகம்

மேலிடத்து மாப்பிள்ளையின் இலங்கை பயணம் ! மர்மம் என்ன ?.!

தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்வே உள்ளிட்ட பணிகளில் “பென்” நிறுவனம் பணியாற்றியது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனம் முதல்வரின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், பென் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களை இலங்கைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடன் சபரீசனும் சென்றுள்ளாராம்.

இதில் என்ன இருக்கிறது என விசாரித்தபோது, பென் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களுடன் சபரீசனும் சென்றுள்ளதால், இலங்கையில் முதலீடு செய்வதற்காகத் தான் சபரீசன் இலங்கைக்கு சென்றுள்ளார் என்கிறார்கள்.

எது எப்படியோ மேலிடத்துக்கு வம்பு ஏதும் வராமல் இருந்தால் சரி என உடன் பிறப்புகள் புலம்புகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button