தமிழகம்

திமுக ஒன்றியச் செயலாளர் மீது கிராம மக்கள் புகார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, தாளையடி கோட்டை ஊராட்சியில் பாப்பார் கூட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் நயினார் கோவில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி மற்றும் அவரது உறவினர்கள் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளங்களை ஜேசிபி மூலம் மூடி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பாப்பார் கூட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் பரமக்குடி தாசில்தார் சாந்தியிடம் மனு அளித்தனர். அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நயினார் கோவிலைச் சேர்ந்த திமுக ஒன்றியச் செயலாளர் சக்தி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விரைந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாப்பார் கூட்டம் கிராம மக்கள் சார்பில் தாசில்தார் சாந்தியிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் சாந்தி உறுதியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button